Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VII)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VII) 

1. தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பது யார்?
Answer: கர்த்தர் (எரேமியா 14:8)

2. விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பது யார்?
Answer: கர்த்தர் (எரேமியா 14:9)

3. எரேமியாவுக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருந்தது யார்?
Answer: கர்த்தர் (எரேமியா 15:18)

4. அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பது யார்?
Answer: மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் (எரேமியா 17:5,6)

5. தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பது யார்?
Answer: கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் (எரேமியா 17:8)

6. கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருந்தது எது?
Answer: யூதா ராஜாவின் அரமனை (எரேமியா 22:6)

7. பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பது யார்?
Answer: கர்த்தர் (எரேமியா 25:38)

8. நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருப்பது எது?
Answer: யாக்கோபின் ஆத்துமா (எரேமியா:32:12)

9. பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது எது?Answer: ஜீவன்கன் செட்டைகளின் இரைச்சல் (எசேக்கியேல் 1:24)

10. சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல இருந்தது எது?
Answer: கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் (எசேக்கியேல் 10:5)

11. பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது எது?
Answer: இஸ்ரவேலின் தேவனுடைய சத்தம் (எசேக்கியேல் 43:2)

12. கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போல ஆனது எது?
Answer: நேபுகாத்நேச்சார் கண்ட சிலையிலுள்ள இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் (தானியேல் 2:35)

13. மிருகங்களுடைய இருதயம் போல ஆனது எது?
Answer: நேபுகாத்நேச்சாரின் இருதயம் (தானியேல் 5:21)

14.  ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போல இருப்பது யார்?
Answer: ஞானவான்கள் 
 (தானியேல் 12:3)

15. நட்சத்திரங்களைப்போல பிரகாசிப்பது யார்?
Answer: அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் (தானியேல் 12:3)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?