Tamil Bible Quiz - நான் யார்?

நான் யார்?

1. மூன்றெழுத்து கொண்டவள் நான், எல்லாருக்கும் தாய் நான். கடை இரண்டில் ஆயுதம் கொண்டவள் நான். நான் யார்?
Answer: ஏவாள் (ஆதியாகமம் :3:20)


2. ஐந்தெழுத்து கொண்டவன் நான், தேவனின் சிநேகிதன் நான். கடை இரண்டில் நோவாவின் மகன் பெயர் கொண்டவன் நான். நான் யார்?
Answer: ஆபிரகாம் (ஆதியாகமம் :20 :1)


3. நான்கெழுத்து கொண்டவன் நான், நூறு மடங்கு அறுவடை செய்தவன் நான். முதலெழுத்து ஓர் உயிரியாம், கடை மூன்றோ பொருள் சேகரித்து வைக்க உதவுமாம். நான் யார்?
Answer: ஈசாக்கு (ஆதியாகமம் :26:1)


4. மூன்றெழுத்து கொண்டவன் நான், சேஷ்ட புத்திரன் நான். கடை இரண்டு உணவு ஒன்றின் பெயராம். நான் யார்?
Answer: ரூபன் (எண்ணாகமம் :16:1)


5. இரண்டெழுத்து கொண்டவன் நான். ஆசாரிய பட்டத்துக்குரியவன் நான். கடை எழுத்து ஓர் ஆங்கில எழுத்தை சுட்டி காட்டுமாம். நான் யார்?
Answer: லேவி (ஆதியாகமம் :49:5)


6. ஐந்தெழுத்து கொண்டவன் நான், கோத்திர பிதாக்களில் ஒருவன் நான். கடை இரண்டில் வாகனம் பெயர் கொண்டவன் நான். நான் யார்?
Answer: இசக்கார் (ஆதியாகமம் :49:14)


7. ஐந்தெழுத்து கொண்டவன் நான், எத்தனின் கடைக்குட்டி நான். கடை இரண்டில் அசைவ உணவு ஒன்றின் பெயர் கொண்டவன் நான். நான் யார்?
Answer: பென்யமீன் (ஆதியாகமம் :49: 27)


8. மூன்றெழுத்து கொண்டவன் நான், ஆதாமின் பேரன் நான். கடை இரண்டு உடலுறுப்பு ஒன்றின் பெயரை ஆங்கிலத்தில் கூறுமாம். நான் யார்?
Answer: ஏனோஸ் (I நாளாகமம் :1:1)


9. ஐந்தெழுத்து கொண்டவன் நான். கூடாவாசி நான். கடையிரண்டு ஆயுதம் ஒன்றினை சுட்டுமாம். நான் யார்?
Answer: இஸ்ரவேல் (I நாளாகமம்:1:34)


10. ஐந்தெழுத்து கொண்டவள் நான். ராஜாவுக்கு மனைவி நான். மூன்றும் நான்கும் பேழை கட்டிய நீதிமான் பெயரைச் சுட்டுமாம். நான் யார்?
Answer: அகிநோவாம் (I நாளாகமம்:3:1)


11. ஆறெழுத்து கொண்டவன் நான். மோவாப் சென்றவன் நான். ஒன்றும், இரண்டும் ஒரு உயிரியைக் குறிக்கும். நான்கும், ஐந்தும் ஒரு நீர்நிலையின் ஆங்கிலப் பெயரைக் குறிக்கும். நான் யார்?
Answer: எலிமெலேக்கு (ரூத்:1:2)


12. ஐந்தெழுத்து கொண்டவன் நான். ஒரு தீர்க்கதரிசியின் தகப்பன் நான். முதலெழுத்து ஆங்கில எழுத்தொன்றைக் குறிக்க கடையிரண்டோ ஒரு ஊரைச் சுட்டிக் காட்டும். நான் யார்?
Answer: எல்க்கானா (Iசாமுவேல் :1:1)


13. ஐந்தெழுத்து கொண்டவள் நான். ராஜாவின் மனைவி நான். என் மூன்றும் நான்கும் எழுத்துகள் ஒரு நாட்டைக் குறிக்கும். நான் யார்?
Answer: பத்சேபாள் (Iஇராஜா:2:19)


14. ஐந்தெழுத்து கொண்டவள் நான்.இயேசுநாதருக்கு பணிவிடை செய்தவள் நான். என் கடையிரண்டு எழுத்தும் காகிதத்தைச் சுட்டுமாம். நான் யார்?
Answer: மார்த்தாள் (லூக்கா:10:38)


15. நான்கெழுத்து கொண்டவன் நான். இயேசுநாதரின் மூதாதையன் நான். முதலிரண்டும் ஆம் எனக் கூற என் கடை  இரண்டெழுத்தோ உலகையே ஆண்ட சாம்ராஜ்யம் ஒன்றினைக் குறிக்கும். நான் யார்?
Answer: எஸ்ரோம் (மத்தேயு :1:3)


16. நான்கெழுத்து கொண்டவன் நான். பஞ்சம் பிழைக்கப் போனவன் நான். முதலிரண்டெழுத்தில் குவளையாக இருக்கும் நான், கடையிரண்டெழுத்தில் கடன் கொடுப்பவனாம். நான் யார்?
Answer: மக்லோன் (ரூத்:1:2)


17. நான்கெழுத்து கொண்டவன் நான். கோத்திர பிதாக்களில் இளையவரின் மகன் நான். என் கடையிரண்டெழுத்தும் குழந்தைகளின் அடிப்படை உணவைக் குறிக்கும். நான் யார்?
Answer: அஸ்பால் (I நாளாகமம் :8:1)


18. எட்டெழுத்து ராஜா நான். என் மூன்றும், நான்கும் எழுத்துக்கள் பெலிஸ்தியரின் பிரதான வீரனின் ஊரை சுட்டும். கடையிரண்டெழுத்தும் மதிப்பளிக்கும். நான் யார்?
Answer: நேபுகாத்நேச்சார் (தானியேல்:3:1)


19. நான்கெழுத்து கொண்டவன் நான். ஆசா ராஜாவுக்கு தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசி நான். என் இரண்டும் மூன்றும் எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஆமோதிக்கும். நான் யார்?
Answer: அசரியா (II நாளாகமம் :15:1)


20. நான்கெழுத்து கொண்ட சிறந்த இராஜா நான். என் கடையிரண்டெழுத்தும் ஸ்நானம் பண்ணுவதை ஆங்கிலத்தில் குறிக்கும். நான் யார்?
Answer: யோசபாத் (II நாளாகமம் : 17:1)

Comments

  1. உள்ளவனை கண்டறிந்தேன் உணவளிக்க உதவி புரிந்தேன் நான் யார் in bible

    ReplyDelete
    Replies
    1. அந்திரேயா.
      யோவான்:6.8,9

      Delete
  2. என்னுடைய தந்தையின் பெயரில் என் தாய் இடம் பெற்றுள்ளார் அது யார்?

    ReplyDelete
    Replies
    1. 1 நாளகமம் 2;29

      Delete
    2. 1). என்னுடைய தந்தையின் பெயரில் தாய் இடம் பெற்றுள்ளார். நான் யார்?
      Answer -அமித்தாயின் குமாரன் யோனா. இருப்பிடம் :
      2 இராஜாக்கள்-14:25, யோனா-1:1.

      Delete
  3. எலிசாவின் குமாரன் என்னப்பட்ட இராஜா யார்?

    ReplyDelete
  4. Ennai kondu poril vetri pera ninatharkal nan kooda sendrum sangaram adaintharkal nan yar

    ReplyDelete
  5. எகிப்திய மன்னனின் மனைவியாகும் சந்தர்ப்பம் எனக்கு வந்தது ஆனால் கர்த்தர் அதைத் தடுத்துவிட்டார். நான் யார்?

    ReplyDelete
  6. ஆபிரகாமின் மனைவி சாராய்

    ReplyDelete
  7. எலிசாவின் குமாரன் என்னப்பட்ட இராஜா யார்? யோவா ஸ் 2, ராஜாக்கள்:13:14.

    ReplyDelete
  8. தகப்பனால் ஒரு பெயரும் தாயால் ஒரு பெயரும் கொண்டவன்.நான் யார்? என் பெயர்கள் என்ன

    ReplyDelete
    Replies
    1. பென்யமீன்
      பென்யமீன், பெனோனி

      Delete
  9. நான் செய்த தவறுக்கு என் எஜமான் கொலை செய்யப்பட வேண்டும் நான் யார்?

    ReplyDelete
    Replies
    1. முட்டுகிற மாடு

      Delete
  10. திருமறையில் சொல்லப்பட்ட முதல் இரண்டு மனைவியை உடைய மனிதன் யார்?

    ReplyDelete
  11. லாமேக்

    ReplyDelete

  12. listen to more than 25 tamil christian radio station worldwide

    கடைசி கால செய்திகள், தீர்க்கதரிசனங்கள், பிரசங்கம், வேதாகம ஆராய்ச்சி, சாட்சிகள், அற்புதங்கள், கிறிஸ்தவ பாடல்கள், மேலும் பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் செய்திகளை கேட்க இப்போதே டவுன்லோட் செய்யுங்கள் Praisefy Christian Radio App.

    ReplyDelete
  13. வேதத்தில் ஸ்தோத்திர பாடல் எது?

    ReplyDelete
  14. வேதத்தில் காணப்படும் வாகனத்தின் பெயர்

    ReplyDelete
  15. நான் ஒரு இளவரசி...... என்னை ஒரு ஊர் பெயர் சொல்லிஅழைப்பார்கள்....
    நான் யார்?என் ஊர் பெயர் என்ன? என் ஊரின் மறு பெயர் என்ன???

    ReplyDelete
  16. இரண்டு பேர் என்னை சுமந்தார்கள் என் நிமித்தம் பெயரிடப்பட்டது நான் யார் ?

    ReplyDelete

Post a Comment

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)