Tamil Bible Quiz - பதிலே பரிசாக.....!- PART I

                பதிலே பரிசாக.....! - PART I

1. என்னைப் பெற்ற அப்பா நான் --------- கேட்டால் தேளைக் கொடுத்தாலும் கொடுப்பார். ஆனால் என்னை நேசிக்கும் என் பரலோக பிதா எனக்கு Best-ஐ கொடுப்பது அதிக நிச்சயம்!!!

Ans: முட்டை (லூக்கா:11:11 to 13)

2. Every Sunday church meeting
   Pastor மூலம்  நமக்கு கிடைக்கிறது வேத வசன பொக்கிஷங்கள்....... ஒரு காது வழியாக வாங்கி மறு காது வழியாக விட்டுவிடாதே..... பலன் கொடு 30, 60, 100 என.... பலன் கொடாவிடில் அப்போஸ்தலனாகிய யாக்கோபு உன்னை ----------------லே தன்னைப் பார்க்கும் மனுஷனுக்கு ஒப்பிடுகிறார்.

Ans: கண்ணாடி (யாக்கோபு:1:23)

3. மன்னாவின் ருசி என்னை சேர்த்த பணியாரம் போலிருக்குமாம்......
என்னை சிங்கத்தின் உடலில் கண்டுபிடித்தார் சிம்சோன் என்ற பலசாலி.....
என்னைக் கண்டுபிடித்தால் அளவாய் சாப்பிடு வளமாய் வாழு. நான் யார்?

Ans: தேன் (யாத்திராகமம:16:31, நியாயாதிபதிகள்: 14:9, நீதிமொழிகள்:25:16)

4. மனுஷன் உன்னை புகழ இடங்கொடாதே... ஜெபம் செய்fuh அறைவீட்டில் தனித்து... உபவாசம் செய் ... முகத்தை கழுவு. உன் தலைக்கு ------------ பூசு. பரமபிதா நிறைவான பலனை உனக்கு தருவார்.

Ans: எண்ணெய் (மத்தேயு:6:16,17)


5. சூப்பராக சமையல் பண்ணினாலும் --------- இல்லை என்றால் அதற்கு சுவையில்லை.... கிறிஸ்தவ உலகிற்கு சுவைகூட்ட நம் பரமபிதா நம்மையும் இந்தப் பொருளாக மாற அழைக்கிறார்.

Ans: உப்பு (மத்தேயு:5:13)

6.யோசேப்புக்கு 20 கொடுத்தார்கள், இயேசுவுக்கு 30 கொடுத்தார்கள். ஐசுவரியவான்கள் தங்கள் செழிப்பிலிருந்து தேவாலய காணிக்கை பெட்டியில் கட்டுக்கட்டாய் கொட்டினார்கள். ஆனால் ஏழை விதவையினால் கொடுக்கப்பட்ட நான் மேன்மை பெற்றேன்.

Ans: காசு(லூக்கா:21:1,2)


7. விசுவாசிகள் என அழைக்கப்படும் நமக்கு இதன் அளவு விசுவாசம் இருந்தாலே மலை போன்ற நம் பிரச்சினை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்குமே.

Ans: கடுகு (மத்தேயு :17:20)


8. பவுல் ரோமருக்கு சொல்கிறார்... பலவீனன் என்னை மட்டும் புசிக்கிறானாம். ஆனால் என்னை புசித்த தானியேலும் நண்பர்களும் புஷ்டியாக, கம்பீரமாக நின்றனர் ராஜாவின் முன். நான் யார்?

Ans: காய்கறிகள்  (தானியேல்1:12)

9. மோசே கன்மலையை அடித்தார் நான் புறப்பட்டு வந்தேன். இயேசு என்னை மாற்றினார் திராட்சை ரசமாய்....நான் யார்.

Ans: தண்ணீர் (எண்ணாகமம்:20:11, யோவான்:2:9)

10. தேவனுடைய அழைப்பும் தெரிந்துகொள்ளுதலும் மாறாதவைகள் என்பதற்கு சாட்சியாக ஒரு கோலிலே காய்த்த நான் அப்பாவால் மகனுக்கு காணிக்கையாக அனுப்பப்பட்டேன். நான் யார்?

Ans: வாதுமை கொட்டைகள்   (எண்ணாகமம் :17:8, ஆதியாகமம்:43:11)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?