Tamil Bible Quiz (Old Testament) - மெய்யாகவே!

மெய்யாகவே!

1. கர்த்தர் தான் படுத்திருந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்பதை மெய்யாகவே அறிந்து கொண்டவன் யார்?

Answer: யாக்கோபு (ஆதியாகமம் :28:16)
2. நான் உனக்கு மெய்யாகவே  நன்மை செய்வேன் என தேவன் யாரோடு கூறினார்?

Answer: யாக்கோபிடம் (ஆதியாகமம்:32:12)
3. மெய்யாகவே தேவன் யாரை சிநேகித்தார்?

Answer: அவருடைய ஜனங்களை (உபாகமம் :33:3)
4. மெய்யாகவே நான் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தேன் என பாவ அறிக்கை செய்தவன் யார்?
Answer: ஆகான் (யோசுவா :7:20)
5. மெய்யாகவே என் வார்த்தைகளில் பொய் இல்லை என கூறியவன் யார்?
Answer: எலிகூ (யோபு :36:4)
6. மெய்யாகவே தேவரீர் உம்மை மறைத்துக் கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர் என கூறிய தீர்க்கதரிசி யார்?
Answer: ஏசாயா (ஏசாயா:45:15)
7. மெய்யாகவே வேதபாரகரின் கள்ள எழுத்தாணி எதை அபத்தமாக்குகிறதாம்?
Answer: கர்த்தருடைய வேதத்தை (எரேமியா :8:8)
8. மெய்யாகவே கர்த்தர் எதை வனாந்தரத்தைப் போல் ஆக்குவார்?
Answer: யூதா ராஜாவின் அரண்மனையை (எரேமியா :22:6)
9. மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசை உடைப்பார் என வாசிப்பது எங்கே?
Answer : சங்கீதம் : 68:21
10. மெய்யாகவே எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என யார் தேவனிடம் கூறுவார்கள்?
Answer : புற ஜாதிகள் (எரேமியா 16:19)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?