Tamil Bible Quiz - வசனம் சொல்வதைச் செய்!

வசனம் சொல்வதைச் செய்!

கேள்வி கேட்பவர் வசனத்தின் இருப்பிடத்தை  மட்டும் கொடுக்க வேண்டும். பதில்  சொல்லுபவர்கள் வசன இருப்பிடத்தில் உள்ள வசனத்தை மனதிற்குள் வாசித்தபின்பு அதில் என்னக் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை நடித்துக் காண்பிக்க வேண்டும். யார் முதலில் நடித்துக் காண்பிக்கிறாரோ அவரே வெற்றியாளர்.
1. எஸ்தர் 6:12 பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான். ஆமோனோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான்.
        
Answer: முக்காடு போடவும்
2. மாற்கு 9:36  ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி,அதை அணைத்துக்கொண்டு.
       
Answer : ஒரு சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து நடுவில் நிறுத்த வேண்டும்
3. II சாமுவேல் 6:14 தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.)

Answer: நடனம் பண்ண வேண்டும்
4. எண்ணாகமம் 16:4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.

Answer : முகங்குப்புற விழ வேண்டும்
5. சங்கீதம் 95:6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்.

 Answer :
பணிந்து குனிந்து முழங்கால்படியிடவும்
6. ஆதியாகமம் 45:2 அவன் சத்தமிட்டு அழுதான். அதை எகிப்தியர் கேட்டார்கள். பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.)

Answer : சத்தமிட்டு அழ வேண்டும்
7. லூக்கா 18:35 பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்தான்.

Answer : பிச்சைகேட்பது போல நடிக்கவும்
8. சங்கீதம் 95:1 கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

Answer : சத்தமாக பாட வேண்டும்
9. நியாயாதிபதிகள் 15:19 அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார். அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது. அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான். ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான். அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

Answer : தண்ணீர் குடிக்க வேண்டும்
10. உபாகமம் 28:29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய், உன்வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம், உதவி செய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுத்தவனுமாய் இருப்பாய்.

Answer : குருடரைப் போல் நடிக்க வேண்டும் 
11. லூக்கா 1:22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான், அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.

Answer : சைகை காட்டி ஊமையாக நடிக்க வேண்டும்
12. 1 சாமுவேல் 14:13 யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான். அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான். அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள். அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான்.

Answer :கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து  போக வேண்டும்
13. Iஇராஜாக்கள் 3:19 இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.

Answer : புரண்டுபடுக்கவும்
14. IIஇராஜாக்கள் 9:30 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான், அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து,

Answer : ஜன்னல்வழியாய் எட்டிப்பார்க்க வேண்டும்
15. II சாமுவேல் 15:30 தாவீது தன் முகத்தைமூடி, வெறுங்காலால்நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின் மேல் ஏறிப்போனான்.அவனோடிருந்த சகலஜனங்களும் முகத்தைமூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.

Answer : முகத்தை மூடிக் கொண்டு நடந்து கொண்டே அழ வேண்டும்
16. உன்னதப்பாட்டு 2:8 இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.

Answer : துள்ளிக் குதிக்க வேண்டும் 

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?